search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் சாலை மறியல்"

    • அரசின் இலவச வீடு கேட்டு நடந்தது
    • போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்

    கலவை:

    ஆற்காடு அருகே வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது33).

    இவர் அரசின் இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கேட்டு கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் இவரது வீடு 2 நாட்களுக்கு முன்பு இடிந்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் வேப்பூர் மெயின் ரோட்டில் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு வந்த ஆற்காடு போலீசார் அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊசிக்கல் மேடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளியூர் பகுதியை சேர்ந்த சிலர் பொதுமக்கள் செல்லும் சாலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும் மேலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய் உடைத்து அந்த தண்ணீரை தக்காளி செடிக்கு விடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பைப் குடிநீர் குழாய் உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டறம்ப ள்ளி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் துறையினர் மற்றும் நாட்டறம்பள்ளி போலீசார் ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . கிராமத்தின் அருகே ஜக்கம் பாளையம் குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இப்பகுதியில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் 30 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 27 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.ஊராட்சி தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    • ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில தேங்கும் நீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் ரெயில் வே தரைப்பாலம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க., ஆட்சி யில் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் மழைக்கா லங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தேங்கிய தண்ணீரை கடந்த செல்லும் பொழுது பழுதாகி நிற்பதும், போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.

    காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தத் தரை பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற நிரந்தர மான நடவடிக்கை எடுக்க கோரி சாமல்பட்டி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் அனைத்து கடைகளையும் இன்று அடைத்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், அதிமுகவினர், வணிகர் சங்க அமைப்பினர் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். 

    • குடிமகன்கள் தொல்லையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சன்னாசிபுரம் செட் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக் குட்பட்டதாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    சாலையோர ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தோட்டத்திற்கு செல்லும் வழியில் குடிமகன்கள் மது குடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மிகவும் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அணைக்கரை ப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன், போடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    • கல்லறை தோட்டத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி யிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை.
    • இறந்த மூதாட்டியின் உறவினர்கள் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் அந்தோணியார் தெருவில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறை தோட்டம் உள்ளது. இங்கு சவரியார்பாளையம், தோமையார்புரம், ஏ.பி.நகர், ஞானபிரகாசியார்புரம், அந்தோணியார் தெரு பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வருகின்றனர்.

    சுமார் 600 கல்லறைகள் உள்ள இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பேகம்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் இங்கு தேங்கி குளம்போல் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாகவும், தண்ணீர் அதிகரித்து கல்லறைக்குள் செல்ல முடியாத நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இன்று சவரியார்பாளையத்தை சேர்ந்த செபஸ்தியம்மாள்(85) என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை புதைப்பதற்காக கல்லறைக்கு எடுத்து வந்தனர். ஆனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கியிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் இறந்தவர்களின் உறவினர்கள் பிணத்தை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் செழியன் தலைமையில் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்து கொள்வதாகவும் உறுதி அளித்தனர். அதனைதொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடலை அவர்கள் அடக்கம் செய்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவலூர் அருகே எலந்தகாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்து தருவதற்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் குடிநீர் குழாய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிறுவலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனாலும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் ஒன்று திரண்டு திடீரென சிறுவலூர்-கவுந்தபாடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • 3-வது வார்டு பகுதிக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
    • அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சித்தையன்கோட்டை பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை ஓரமாக கொண்டு செல்லப்பட்ட குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்படுவதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சரி செய்யப்பட்டு அவ்வப்போது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 3-வது வார்டு பகுதிக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிதண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று பலமுறை கூறியும், 3-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    எனவே உடனடியாக குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி சித்தையன்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பேரூராட்சி அலுவலர்கள் குடிதண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின் தடையை கண்டித்து சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பீர்கடவு பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மின் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் மின் தடையை கண்டித்து ராஜன் நகர் பவர் ஹவுஸ் எதிரே உள்ள சக்தி- பண்ணாரி சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார், ராஜன் நகர் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது மக்கள் 25 நாட்களாக மின்தடையால் கடும் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மின்பழுதை சரி செய்து சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக உங்கள் பகுதியில் மின் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.

    • குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கடத்தூர் ஊராட்சி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் 2 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு பொது மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லை என கூறப்படு கிறது. இங்கு சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் மனு கொடு த்தனர். ஆனால் சாக்கடை வசதி செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் சாக்கடை வசதி செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் கடத்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இன்று காலை பர பரப்பான நிலை நிலவியது.

    • போலீசாரிடம் வாக்குவாதம்
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே சுடுகாட்டுப் பாதை பிரச்சனையை தீர்க்கக் கோரியும், இது தொடர்பான பிரச்சனையில் முதியவரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கடந்த பல ஆண்டுகளாக தனியார் விவசாய நிலம் வழியாக பிணங்களை அந்த கிராம பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தோண்டினாராம். இதனால் அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பான பிரச்சினையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் வெட்டினராம்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டுப் பாதை பிரச்சினையை தீர்க்கக் கோரியும், சீனிவாசனை கத்தியால் வெட்டிய நபர்களை கைது செய்யக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

    தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே புகார் கொடுத்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சீனிவாசனை வெட்டும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்காது என்று கோபமாக தெரிவித்த பொதுமக்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை போலீசார் தடுக்கவே அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கார்த்திக் பொதுமக்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு ஊராட்சியில் உள்ள கிராம சேவை மையத்தில் 100 நாள் திட்ட சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்றதலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு வந்த அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் 100 நாள் திட்டபணி யாளர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை சரிவர வழங்க வில்லை என்று கூறினர்.

    மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலை சரிவர வழங்காததை கண்டித்து அவ்வூர் வழியாக செல்லும் வேலூர் - ஆரணி மெயின்ரோடு மேட்டுக்குடி கூட்ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீ சன், வட்டார வளர்ச்சி அலுவலர் சவீதா, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இனிவரும் காலங்களில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    அதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக வாகனங்கள் மாற்றுப்பாதை யில் திருப்பி விடப்பட்டது.

    ×